header ads

பிஞ்சு குழந்தையை தாக்கிய யாழ் பெண் கைது - Video

குழந்தையின் மீது கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்திய பெண் கைதுசெய்யப்பட்டார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரம்பினால், குழந்தையை கண்மூடித்தனமாக அந்தப் பெண் அடிக்கும் வீடியோ காட்சிகள் அடங்கிய ஒளிநாடா சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்தே, மேற்படி பெண்ணை, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவ​ரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






Post a Comment

0 Comments